WhatsApp Group Join Now
Telegram Group Join Now

நீரஜ் சோப்ரா மனு பாக்கர் காதல்? மௌனம் கலைத்த மனு பாக்கர் தந்தை.

சமூக ஊடகங்களில் மனு பாக்கர் மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோர் பேசிய வீடியோ இருவர் இடையே காதல் இருப்பதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. நீரஜ் சோப்ரா மனு பாக்கர் காதல் குறித்து மனு பாக்கர் தந்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் மனு பாக்கர் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றார். 10 மீட்டர் பிரீஸ்டைல் துப்பாக்கி சுடும் போட்டியில் தனி நபர் மற்றும் கலப்பு இரட்டையர் என இரண்டு பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

மறுபுறம் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். சென்ற முறை தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்த முறை வெள்ளி பதக்கம் வென்று தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் 2024க்குப் பிறகு இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் மற்றும் அவருடைய அம்மாவுடன் பேசி கொண்டிருந்த வீடியோ திங்களன்று இணையத்தில் வைரலாக பரவியது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 முடிந்த பிறகு ஒரு நிகழ்ச்சியில் நீரஜ் கலந்து கொண்டார். அங்கு மனு பாக்கர் மற்றும் அவரது தாயாரும் இருந்தனர். அப்போது மூவரும் பேசி கொண்டிருந்த விதத்தை வைத்து, அந்த பேச்சு வார்த்தை நீரஜ் மற்றும் மனுவின் திருமணம் பற்றியதாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்துக்களை வைத்து வருகின்றனர். இந்த வீடியோவை வைத்து, நீரஜ் சோப்ரா மனு பாக்கர் காதல் பற்றிய விவாதம் ஓடி கொண்டிருக்கிறது.

இருப்பினும், மனு பாக்கரின் தந்தை, நீரஜ் சோப்ரா மனு பாக்கர் காதல் பற்றிய வதந்திகளுக்கு ஒரு முற்று புள்ளி வைத்துள்ளார். 

நீரஜ் சோப்ரா மனு பாக்கர் காதல்?

“மனு பாக்கருக்கு இன்னும் சிறு வயது தான். அவளுக்கு திருமண வயது கூட இல்லை. அதைப் பற்றி இப்போது யோசிக்கக்கூட இல்லை,” என்று மனுவின் தந்தை ராம் கிஷன் டைனிக் பாஸ்கரிடம் கூறினார், அவளுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்த வதந்திகள் அல்லது ஊகங்களை நிராகரித்தார்.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், மனுவின் தாயாருக்கும் நீரஜுக்கும் இடையே பெரிய தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. மனுவின் தாயார் நீரஜை தனது மகனாக கருதுவதாகவும், அதனால் இருவருக்கும் இடையே பந்தம் ஏற்பட்டதாகவும் ராம் கிஷன் தெரிவித்தார்.

“மனுவின் தாய் நீரஜை தன் மகனாகவே கருதுகிறாள்,” என்று அவர் கூறினார், அவர்களுக்கிடையில் இருக்கும் பிணைப்பையும் பாசத்தையும் எடுத்துக்காட்டினார், அதே நேரத்தில் தடகள நட்சத்திரத்திற்கும் மனுவிற்கும் இடையிலான காதல் கோணத்தை நிராகரித்தார்.

நீரஜ் மாமாவும், நீரஜ் சோப்ராவின் திருமணத்தைப் பற்றிய பேச்சுக்கள் குறித்து பேசினார். “நீரஜ் வெள்ளி பதக்கத்தை கொண்டு வந்ததை, நாடு முழுவதும் தெரிந்து கொண்டது. அதே போல், அவர் திருமணம் செய்து கொள்ளும் போது, ​​அனைவருக்கும் தெரியும்,” என்றார்.

மனு மற்றும் நீரஜ் இருவரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இன்னும் சிறப்பாகச் விளையாடி இருக்கலாம் என நினைக்கின்றனர். இருப்பினும் அவர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். இதன் மூலம் வருங்கால இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் தங்களது ஆர்வத்தை அதிக படுத்த உதவியுள்ளனர்.

Leave a Comment